உறவுகள் உறங்காமல்,
கனவுகள் கலையாமல்,
நினைவுகள் கலங்காமல்,
சுமைகள் வலிக்காமல்,
மெல்லிய காற்று விரைந்து வர,
மலர் மொட்டுகள் விரிந்து பார்க்க,
ஏங்கி தவிக்கும் தேனிக்கூட்டம்,
கதிரவனை தவிழும் மேகமூட்டம்,
வெறுமையை கருமையாக்கி,
மேகம் போர்த்திய அகன்ற வானில்,
நிறைவாக கருவண்ணம் தீட்டி,
சிறு துளிகளாய் துவங்கி,
மேகத்தை இயக்கி மயக்கி,
மண்ணை கவ்வி உலுக்கி,
பிறகு சத்தமிடுமாம்,
மழை என்னும் இயற்கை வரம்.
- பிராங்கிளின்
No comments:
Post a Comment